குவைத்தில் கள்ளத் தொடர்பை தட்டிக்கேட்ட மனைவிக் கொன்ற இலங்கையர்!!

453

Murder

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தனது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளதை அறிந்துகொண்டதை அடுத்தே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அந்த இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர். அங்கு கொலையான பெண் இரத்த வௌ்ளத்தில் கிடந்ததை கண்ணுற்ற அவர்கள் கணவரிடம் வினவிய போது, யாரோ ஒரு பெண் அவரைக் கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர் இடம்பெற்ற தீவிர விசாரணைகளின் போது, தனக்கு பிறிதொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த பின், தனது மனைவியுடன் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அவரைக் குத்திக் கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.