ஜூலை மாத ராசி பலன்கள் – ரிஷபம்

442

rishabam

உங்கள் ராசிக்கு 9, 12க்குரிய குருபகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். கேது இரண்டாமிடத்திலும், ராகு எட்டாமிடத்திலும் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். இனி மாதக் கிரக சஞ்சாரங்களை வைத்துப் பார்க்கும்போது, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மன தைரியம் மேலோங்கும்.

வெளியூரில் வேலை செய்யும் சிலருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். இரண்டாமிடத்து சுக்கிரன் மூலம் சிலருக்கு எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மாத பிற்பகுதியில் வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. கொஞ்சம் விரயச் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு கண் சம்மந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

வீட்டில் உறவினர் வருகை அதிகமாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைத்துவிடும். எதிர்பார்த்த கடனுதவியும் கிடைக்கும் . சொல்வாக்கு, செல்வாக்கு, அதிகாரம், கௌரவம் கிடைக்கும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு முழுவதும் ஜென்ம குருவின் சஞ்சாரத்தால் மனக் கிலேசமும் ஏதாவதொரு சஞ்சலமும் இருந்தவண்ணம் இருக்கும். ராகு , கேது சஞ்சாரமும் சரியில்லை என்பதால், கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது, நல்லது. சனியின் ஆறாமிடத்து சஞ்சாரம் மிகவும் நல்லது.

ஆனால், சனி கொடுக்கும் பலன்களை முழுவதுமாக அடையவிடாமல் தடுப்பது குரு,ராகு, கேது முதலிய கிரக சஞ்சாரங்களே. ஆனால், மாதக் கிரக சஞ்சாரங்களின் மூலம் நற்பலன்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு. வியாழக் கிழமைதோறும், குரு பகவானுக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் ராகு கேதுக்களுக்கும் வழிபாடு செய்யவும்.