யாழில் சிறுமியை துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை துர்நடத்தைக்கு உற்படுத்த முயன்ற 15 வயது மதிக்கத்தக்க சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் யாழில் இவ்வாறான சிறுவர் துஸ் பிரயோகங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.