
பொல்லால் தாக்கி தனது தந்தையைக் கொன்ற ஒருவர் ரத்கம – ஓவகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். ரத்கம – ஓவகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பப் பிரச்சினை காரணமாக ஏற்பாட்ட முரன்பாடு காரணமாக தென்னந்தோப்பு ஒன்றில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற போது தந்தையும் மகனும் போதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.





