ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு!!

399

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் மேலாளர் குடும்பத்துடன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயங்கி வரும் டாடா ஸ்டீல் நிறுவனத்தில் மூத்த மேலாளராக பணிபுரிந்து வருபவர் கிருஷ்ண குமார். 45 வயதாகும் கிருஷ்ண குமாருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகள்கள் இருந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ண குமார், தனது மனைவி டோலி தேவி மற்றும் 2 மகள்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருமே திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டு கதவை உடைத்துச் சென்று பார்த்தனர். அப்போது, 4 பேரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கிருஷ்ணகுமார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மும்பையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கிமோதெரபி மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில் கிருஷ்ணகுமார் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனையடுத்து கிருஷ்ணகுமார் தனது மனைவியும் மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.