மகனின் தலையில் ஆணி அடித்து சித்ரவதை செய்த தந்தை!!

631

உத்தரப் பிரதேசம் பிரோசாபாத் பகுதியில் 22 வயதான சுனில் என்ற இளைஞர் தலையில் இரும்பு ஆணி அடிக்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்துக்கு சென்றார்.

அவரது தலையில் இரண்டரை அங்குல நீளமான ஆணி அடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுனில் தெரிவித்ததாவது, குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவிய சொத்து பிரச்சினை காரணமாக தந்தை மற்றும் சகோதரர் இணைந்து இவர் மீது இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளனர்.

இதுவே முதல் சம்பவமல்ல. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சுனிலின் தலையில் இதேபோல் தாக்குதல் நடைபெற்றது.

அப்போது சம்பவத்தை மறைக்க அவர் போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பப்பட்டார். அடுத்த நாளே மருத்துவமனையில் அனுப்பப்பட்ட இவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீஸ் இதுவரை எழுத்துப்பூர்வ புகார் பெறவில்லை. இருப்பினும் புகார் கிடைத்தவுடன் தந்தை மற்றும் சகோதரர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்துள்ளனர்.

குடும்பத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம் சில நேரங்களில் ஆபத்தான சூழலாக மாறும் என்பதை இந்த சம்பவம் வெளிப்படுத்துகிறது. பொதுமக்கள் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையுடன் உள்ளனர்.