முச்சக்கரவண்டி விபத்து : இரண்டு பெண்கள் உட்பட மூவர் காயம்!!

449

எல்ல – வெல்லவாய வீதியில் 03ஆவது மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று செவவ்வாய்க்கிழமை (08.07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.