16 வயது காதலியை கொலை செய்துவிட்டு 28 வயது காதலன் எடுத்த விபரீத முடிவு!!

915

கம்பளை, மில்லகஹமுல, பன்விலதென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி சிறுமியைக் கொலை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பான தகராறில் இது நடந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 16 வயதுடைய சிறுமி தனது வீட்டில் இருந்தபோது சந்தேகநபர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடல் அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.