
மொனராகலை – கொழும்பு பிரதான வீதியில் பஸ் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் இணைந்து பஸ்ஸில் இருந்த பயணிகள் பிரதேசவாசிகளின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தம் இன்று வியாழக்கிழமை (27.11.2025) காலை இடம்பெற்றுள்ளது. சுமார் 23 பயணிகள் பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த அனர்த்தத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.





