பணம் வலுவிழக்கும் வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை : அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு!!

43

2026 ஆம் ஆண்டில் உலகம் சந்திக்கப் போகும் பொருளாதார மாற்றங்கள் குறித்து பல்கேரியாவின் புகழ்பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பாபா வங்காவின் கணிப்புகள் குறித்து சில சந்தேகம் இருந்தாலும், அவரது கணிப்புகள் சில நிஜமாகியுள்ளன.இவை தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பாபா வங்காவின் கணிப்புப்படி, எதிர்காலத்தில் பணத்தின் மதிப்பு உலகளவில் வீழ்ச்சியடையும். இதனால் பணப்புழக்கம் குறைந்து, மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ல் நிலநடுக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும். செயற்கை நுண்ணறிவின் அதீத வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார முறைகள் பெரும் மாற்றத்தை சந்திக்கும் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியின் பொழுது முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிடமாக உலோகங்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று பாபா வங்கா கூறியுள்ளார்.

தங்கம் வெள்ளி மற்றும் செப்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை தொட வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி மற்றும் செப்பு ஆகியவை தங்கத்திற்கு இணையான முக்கியத்துவம் பெறும் என்றும் அவர் கணித்துள்ளார்.

செப்பின் தேவை அதிகரிப்பதால் செப்பு ‘புதிய தங்கம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு மதிப்பு பெறும் என்று அவர் கணித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த நிலையில், திடீரென விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகின்றது.

தங்கம் தற்போது வரை பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளதுடன், வெள்ளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் அவற்றில் அதிகளவு முதலீடு செய்து வருகின்றார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் நிலையான தன்மை இல்லாத காரணத்தினால் முதலீட்டாளர்களின் பார்வை செப்பு பக்கம் திரும்பியுள்ளது. ஆண்டு இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸ் (மதிப்பீடு) $4,900க்கு அருகில் இருக்கும் என்று கணித்துள்ளன.

இந்த மாற்றம் ஒரு தற்காலிக யோசனை மட்டுமல்ல, நீண்டகால உத்தியாக மாறி வருவதாகவும்,இந்த சூழலில், செப்பு அடுத்த தங்கமாக மாறும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், செப்பின் முக்கியத்துவமும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதுவரை, செப்பு முக்கியமாக தொழில்துறையில் மட்டுமே பயன்படுத்தப்படும் உலோகமாக இருந்து நிலையில், தற்போது மாறிவரும் உலகப் பொருளாதார சூழ்நிலையில், செப்பு தற்போது முதலீட்டிற்கு சாதகமான உலோகமாக மாறி வருகின்றது.

எதிர்காலத்தில் செப்பும் முதலீட்டாளர்களுக்கு நல்ல இலாபத்தை வழங்கும் என்று சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்த சூழலில், செப்பு வேகமாக வளர்ந்து வருகிறது.மின்சார வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், ஸ்மார்ட் பவர் கிரிட் அமைப்புகள் மற்றும் தரவு மையங்களின் விரிவாக்கம் போன்ற அனைத்து எதிர்கால தொழில்நுட்பத் துறைகளிலும் செப்பு ஒரு முக்கிய மூலப்பொருளாக மாறியுள்ளது.

இந்தத் துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் போது, ​​தாமிரத்திற்கான தேவையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது.

இதனால் சந்தையில் தற்போதைய சரிவு மற்றும் ஏற்ற இறக்கத்தை அச்சுறுத்தலாகப் பார்க்கக்கூடாது என்றும், மாறாக ஒரு முதலீட்டு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பாபா வங்காவின் கணிப்புகள் பலமுறை உண்மையாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரு வழிகாட்டுதலே தவிர உறுதியான முடிவுகள் அல்ல. மேலும் பாபா வங்காவின் கணிப்புகள் எழுத்துப்பூர்வமானவை கிடையாது.

அவரின் வாய்மொழி கணிப்புகள் அவர்களது சீடர்களால் குறிப்பு எடுக்கப்பட்டவை என்பதால் இதன் உண்மைத் தன்மை குறித்து கேள்விகள் உள்ளது.