பிரியாணி சாப்பிட்ட பின் தார்பூசணியால் பலியான நால்வர் : திடீர் திருப்பம்!!

18

மும்பையில் பிரியாணி சாப்பிட்ட பின்னர் தார்ப்பூசணி உண்ட ஒரே குடும்பத்தை சேர்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் உட்கொண்ட தர்பூசணியில் எலி விஷம் கலக்கப்பட்டிருந்தது என தடயவியல் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

மும்பையின் பைதோனியில் உள்ள 40 வயதான அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி 35 வயதான நசீம், மற்றும் அவர்களது இரண்டு மகள்களான 16 வயதான ஆயிஷா,

13 வயதான ஜைனப் ஆகிய நான்கு பேரும், ஏப்ரல் 26 அன்று தெற்கு மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் யஉயிரிழந்தவர்களின் உள்ளுறுப்பு மாதிரிகள் மற்றும் தர்பூசணிசேகரிக்கப்பட்டது.

அம்மாதிரிகளில், பொதுவாக எலி விஷத்தில் பயன்படுத்தப்படும் துத்தநாக பாஸ்பைடு கண்டறியப்பட்டது என்று தடயவியல் அறிவியல் ஆய்வகம் வியாழக்கிழமை (07.05) மும்பை பொலிஸார் சமர்ப்பித்த தடயவியல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துத்தநாக பாஸ்பைடு, எலிகள் போன்ற கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்தவும், விவசாய நிலங்கள் அல்லது சேமிக்கப்பட்ட தானியங்களில் ஒற்றை டோஸ் விஷமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

துத்தநாக பாஸ்பைடு அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது என்றும், அதுவே அந்தக் குடும்பத்தின் மரணத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.