பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த பிரபல நடிகரின் தந்தை!!

301

Karan

சென்னையில் நடிகர் கரணின் 90 வயது தந்தை பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள நடிகர் கரணின் தந்தை, கேசவன், கோயம்பேடு சேமாத்தம்மன் கோயில் தெருவில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவரது வீடு திங்கள்கிழமை வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்தபோது உயிரிழந்த நிலையில் கேசவன் தரையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். மேலும், கரணின் தந்தை வயதின் காரணமாக தான் இறந்துள்ளார் என்பது தெரியவந்ததால் அவரது உடல் நடிகர் கரணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.