விமான விபத்து – விமானி உள்பட 10 பேர் பலி..!

565

அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா நகரில் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உட்பட 10 பரிதாபமாக உயிரிழந்தனர்.

மலைகள் சூழ்ந்த அலாஸ்கா பகுதியில் இருந்து நாட்டின் பிற இடங்களுக்கு செல்ல விமான பயணம் ஒன்றையே பெரும்பாலான மக்கள் தேர்வு செய்கின்றனர்.

கடுமையான தட்பவெப்ப நிலை மற்றும் பாதையில் குறுக்கிடும் பெரும் மலைத் தொடர்கள் இவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாத அலாஸ்கா மக்கள் வான்வழிப் போக்குவரத்தை தொடர்ந்துக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில், அலாஸ்காவில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 9 பயணிகளுடன் புறப்பட்ட தனியார் விமானம் ஓடு பாதையை விட்டு உயர எழும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.



விழுந்த வேகத்தில் பெரும் தீப்பிழம்பாக மாறிய விமானத்தை தீயணைப்பு படையினரால் நெருங்க முடியவில்லை. இந்த விபத்தில் விமானத்தினுள் இருந்த 9 பயணிகள் மற்றும் விமானி உட்பட 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.