சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறது தானாக தீப் பிடித்து எரியும் குழந்தை!!

462

Baby

விழுப்புரம் மாவட்டத்தில் தானாக தீப்பிடித்து எரியும் குழந்தை சிகிச்சை பெற்று வீடு திரும்பவுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்- ராஜேஸ்வரி தம்பதியினரின் மகனது உடலில், தானாகவே அடிக்கடி தீப்பிடித்து எரிகிறது.

இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குழந்தைக்கு தேவையான அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டு, காயமும் குணமடைந்து விட்டது. இன்னும் ஒருவாரத்தில் குழந்தை வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மருத்துவர்கள் ஒருவர் கூறுகையில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இதுவரை அதன் உடலில் தீப்பிடிக்கவில்லை.

குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை அனைத்தும் முடிவடைந்துவிட்டது. தற்போது நலமுடன் இருக்கிறான்.

இன்னும் ஒரு வாரத்தில் சுகாதாரத்துறையிடம் குழந்தைக்கு எடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த தகவலை தெரிவித்துவிட்டு, குழந்தையை அதன் பெற்றோர்களுடன் வீட்டிற்கு அனுப்ப உள்ளோம் என்று கூறியுள்ளார்.