தெலுங்கு நடிகை தற்கொலை : காதலனிடம் பொலிசார் தீவிர விசாரணை!!

532

Sucide

தெலுங்கு நடிகை தீப்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டம் தனுகுரை சேர்ந்த அப்பாநாயுடு என்பவரின் மகளான தீப்தியின் இயற்பெயர் ராமலட்சுமி.

இவருக்கும், விஜயநகரம் பார்வதிபுரத்தில் பெயிண்டராக வேலை பார்க்கும் சங்கர் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கணவரை விவாகரத்து செய்து விட்டு ஹைதராபாத்துக்கு குடிபெயர்ந்தார்.

தீப்தி என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு படங்களில் துணை நடிகையாக நடித்து உள்ளார். மேலும் அகவனம், லக்கிலட்சுமி போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

தற்போது ஹைதராபாத் பட்டேல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது காதலன் ரமேஷ்குமாருடன் கணவன்-மனைவியாக வசித்து வந்தார்.

ரமேஷ்குமாரும் திரையுலகில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை தீப்தி மர்மமான முறையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்த காதலன் ரமேஷ்குமார் சடலத்தை இறக்கி பொலிசிற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

தீப்தி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகமடைந்த பொலிசார், தீப்தி காதலன் ரமேஷ்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் கூறுகையில், நேற்று காலை வீட்டிற்கு வந்தேன். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது, தீப்தி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

பின்னர் ஜன்னல் வழியாக சென்று பிணத்தை இறக்கினேன் என்று கூறியுள்ளார். தீப்தி தனது தற்கொலையை ‘ஐ பேடில்’ பதிவு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

act