ஏலத்தில் விடப்படும் மோடியின் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோட்!!

440

Modi

கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அணிந்திருந்த கோட் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தினவிழாவை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வந்திருந்தார். அப்போது, அவருடனான சந்திப்பின்போது, மோடி 10 லட்சம் மதிப்புள்ள கோட்டை அணிந்திருந்தார்.

அதில் அவருடைய பெயர் சிறிய எழுத்துகளால் பொறிக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்த எதிர்க்கட்சிகள் கண்டம் தெரிவித்தன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய “கோட்’ குஜராத் மாநிலத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து சூரத் மாநகராட்சி ஆணையர் மிலிந்த் தோராவனே பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது, ஒபாமா வருகையின் போது மோடி அணிந்திருந்த கோட், அத்துடன் கடந்த 9 மாதங்களில் மோடி தனது ஆட்சியில் பெற்ற 455 பரிசுப் பொருள்களும் புதன்கிழமை முதல் ஏலம் விடப்படும்.

இந்த ஏலத்தில் திரட்டப்படும் நிதி “கங்கையை தூய்மைப்படுத்தும்’ திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.

இந்த ஏலம் எஸ்எம்சியின் அறிவியல் மாநாட்டு மையத்தில் நடைபெறும். சூரத்தில் இந்த ஏலத்தை நடத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.