அரசுடனான தொடர்புகள் மீண்டும் கட்டியெழுப்பப்படும் : வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன்!!

1151

Wigneswaran

பாதிக்கப்பட்டுள்ள தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்துடன் செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கல்வி ராஜாங்க அமைச்சர் வீ. ராதாகிருஷ்ணனுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முதலமைச்சர் இதனை கூறியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் அதற்கு துரிதமான தீர்வுகளை வழங்குவதாக கல்வி ராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கல்வியமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி அது குறித்து ஜனாதிபதி அல்லது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எண்ணியுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.