நாடு முழுவதும் வை-பை சேவையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!!

601

wi-fi-logo

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இலவச ‘வை பை’ இணைப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் தொலைத்தொடர்பாடல் பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னதாக கொழும்பு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 250 இடங்களில் இலவச ‘வை – பை’ இணைப்புக்கள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் இரண்டாம் கட்ட பணிகள் முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில் 750 இடங்களுக்கு இலவச ‘வை-பை’ இணைப்புக்கள் வழங்கப்படவுள்ளன.