இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே. 651 என்ற விமானத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.13க்கு டுபாய் ஊடாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேன, ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் கிறிஸ் நோனிஸ் உள்ளிட் 6 பேர் லண்டன் புறப்பட்டனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் சாதாரண பயணிகளைப் போன்று ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்குச் சென்று காத்திருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.