முல்லைத்தீவு முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து பரந்தனிற்கு குறுந்தூர சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்துடன், கொழும்பிலிருந்து வந்த லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த ஐவர் காயமடைந்துள்ளனர். மோதிய வாகனம் பேருந்துடன் மோதி குடை சாய்ந்ததுடன், பேருந்து வீதியை விட்டு விலகி சென்றுள்ளது.
வீதியினருகின் உள்ள பனை மரத்துடன் இரண்டு வாகனங்களும் மோதியுள்ளன.
விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.