வவுனியா செட்டிகுளம் பிரதேச கல்வி பேரவைக்கு தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் செட்டிகுளம் இணைப்பாளர் தயானின் வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியம் வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் நேற்று (12.03) செட்டிகுளம் பிரதேசசெயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் ந.கமலதாசனிடம் தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), உறுப்பினர் சர்மிலன் ஆகியோரால் கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் திரு ந.கமலதாசன் எமது செட்டிகுளம் பிரதேசத்தில் வறுமையின் காரணமாக கற்றல் உபகரணங்களை வாங்க முடியாமல் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களை அதிபர்கள் ஊடாக இனம் கண்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வி கற்க வைப்பதே எமது கல்வி பேரவையும் குறிக்கோள் ஆகும். அதன் நிமித்தம் உங்கள் உதவி மிக சிறந்தது அதற்காக தமிழ் விருட்சம் ஆகிய உங்களுக்கும், வழங்கிய இளந்தளிர் கல்வி, சமூக அறவாரியதுக்கும் எமது செட்டிகுளம் கல்வி பேரவையினதும்,இணைதலைவர் ஆகிய எனதும் மனமார்ந்த நன்றிகள் என்றார்.