வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்கள் விடுதலை!!

465

fish

வவுனியா சிறையில் இருந்து மேலும் 43 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 22ம் திகதி நடுக்கடலில் மீன் பிடித்த 86 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது. 86 மீனவர்களில் 29 பேர் நாகையைச் சேர்ந்தவர்கள். 57 பேர் காரைக்காலைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டனர். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் 86 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் உத்தரவு மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட பகுதியின் அனுப்பப்பட்டது.இதையடுத்து ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 43 மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்று வவுனியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள மேலும் 43 மீனவர்களையும் விடுதலை செய்ய திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலையான 86 மீனவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். இன்னும் ஓரிரு நாளில் அவர்கள் தமிழகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியை தமிழகத்தின் பிரபல இணையத்தளங்கள் பிரசுரித்துள்ளன.