வவுனியா பெரிய நொச்சிக்குளம் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு!!(படங்கள்)

466

வவுனியா பெரிய நொச்சிக்குளம் (நேரியகுளம்) றோமன் கத்தோலிக்க பாடசாலையில் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி செ.தர்மசீலன் தலைமையில் இன்று(21.03) நடைபெற்றது.

இன் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகதாரலிங்கம் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி செ.அன்ரன் சோமராஜா (வலயக் கல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு),கே.தவரட்ணம் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்-கல்வி அபிவிருத்தி), வண.பிதா அற்புதராஜ் (பங்குத் தந்தை-இலுப்பைக்குளம்), க.அந்தோணிஐயா (தவிசாளர்- வெங்கலசெட்டிகுளம்), ச.ஜேசுதாசன்(கோட்டக் கல்விப் பணிப்பாளர்-வெங்கலசெட்டிகுளம்), M.P.நடராஜ் (வவுனியா கோட்டக் கல்விப் பணிப்பாளர்), S.கணேசபாதம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்-ஆரம்பக்கல்வி), செ.விஜயகாந்தன் (ஆசிரிய ஆலோசகர் -ஆரம்பக்கல்வி) ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இன் நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கப்பட்டன.

1 2 3 4 5 6 8 9