வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஓமந்தை இணைப்பாளர் திவாகரன் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாபெரும் இரத்ததானம் முகாம் நேற்று முன்தினம் (21.03) காலை 09.00 மணி தொடக்கம் 12.30 மணிவரை நடைபெற்றது.
ஓமந்தை வாழ் இளைஞர்களின் பூரண ஒத்துழைப்பிலும் பொது மக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் பங்களிப்பில் வெற்றிகரமாக இவ் இரத்ததான முகாம் நடைபெற்றது.
இவ் இரத்ததான நிகழ்விற்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உபநகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர், தாதியர்கள், ஊழியர்கள், ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி. அனுசியா, வவுனியா மாவட்ட தேசிய இளைஞர் மன்றத்தின் தலைவர் அமுதவாணன், ஓமந்தை மத்திய கல்லூரி ஆரியர்களான திரு.சந்திரமோகன், திரு.தர்ஷன், திரு.கஞ்சுதன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான முத்தையா கண்ணதாசன்,
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன், செயலாளர் ஸ்ரீ.கேசவன்,உப செயலாளர் கிருஷ்ணபிரபு பொருளாளர் த.நிகேதன், ஊடக இணைப்பாளர் வ.பிரதீபன், கழகத்தின் உறுப்பினர்களான மனோஜன், கஜீபன், முகுந்தன், நிசோகரன், விஷ்ணுதாசன், சுஜீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.