யுத்தத்தின் பின் 2012 இல் மீளகுடியேறிய ஓமந்தை புதியவேலர்சின்னகுளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அறநெறி பாடசாலையில் கற்கும் 35 மாணவர்களுக்கு கோவில் தலைவர் குமரேஸ் தமிழ் விருட்சத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஸ்கொட்லாந்தில் வசிக்கும் கமலசீலனின் நிதி அனுசரணையில் நேற்று(23.03) கற்றல் உபகரணங்கள் ஆலயத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது.
கோவில் தலைவர் குமரேஸ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோருடன் கிராம அபிவிருத்தி சங்க தலைவி திருமதி ஜீவமலர், கோவில் செயலாளர் தினேஷ் உட்பட கிராம மக்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.