வவுனியா பிரஜைகள் குழு தலைவருக்கு பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு!!

500

vv

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசாவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளனர்.

இது தொடர்பாக கி.தேவராசாவுடன் வினவியபோது, வவுனியா வடக்கு நெடுங்கேணி மத்தியில் அமைந்துள்ள தனது பத்திரிகை விற்பனை நிலையத்திற்கு இன்று வருகை தந்த நெடுங்கேணி பொலிஸார் இந்த அறிவிப்பு கடிதத்தை தந்துள்ளனர்.

அக்கடிதத்தில் இப்பிரதேசத்தில் இடம்பெறும் விசாரணைகள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக எதிர்வரம் 30ஆம் திகதி கொழும்பில் உள்ள புதிய அரசாங்க அதிபர் கட்டிடத்தில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் இரண்டாம் தள அதிகாரியை சந்திக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, சட்டத்துக்கு முரணான கைதுகள், தடுத்து வைத்தல்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவிருந்த நிலையில், தேவராசாவிற்கு கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.