காதலை ஏற்க மறுத்த மாணவியை சுட்டுக் கொன்ற நபர்!!

842

oneside_love_003

பெங்களூரில் பள்ளியிலேயே மாணவியை சுட்டுக் கொன்ற வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில், கௌதமி என்ற மாணவி(18) இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்துள்ளார். இவரை அப்பள்ளியிலேயே வேலை பார்த்து வந்த ஊழியரான மகேஷ், நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் பொலிசார், காதல் பிரச்னையும் காரணமாக இருக்குமா என சந்தேகிக்கின்றனர். மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகேசை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

மகேஷ், மைசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.

oneside_love_003 (1)