மத்திய அமைச்சர் உடை மாற்றும் அறையில் ரகசிய கமரா இருந்ததாக புகார் எழுந்த நிலையில், ஆடைகளை வாங்கும்போது, அவற்றை வீட்டில் சென்று அணிந்து பார்க்க வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
கோவாவில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்ற பிரபல ஆயத்த ஆடை கடை ஒன்றில், உடை மாற்றும் அறையில் ரகசிய கமரா இருந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இது மாதிரியான அச்சத்தின் காரணமாக, நான் ஒருபோதும் கடைகளில் உள்ள அறைகளில் உடைகளை முயற்சித்துப் பார்ப்பதில்லை.
ஆனால், பெரும்பாலானவர்கள் கடைகளிலேயே உடைகளை முயற்சித்துப் பார்க்கும் நிலையில், இந்த மாதிரியான சம்பவம் வெளிவந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.
உடைகளை வாங்குபவர்கள், வீட்டிற்கு வந்து அணிந்து பார்த்து, சரியில்லையென்றால் திரும்பக் கொடுப்பதே பாதுகாப்பானதாக இருக்கும்.
ஆனால், ஒரு பெண் கடைகளில் தவறான இடங்களில் இம்மாதிரி கமராக்கள் இருப்பதாக நினைத்தால், உடனடியாக காவல்துறையை அணுக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.