வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் கடை ஒன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் இந்தத் தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடை வியாபார நடவடிக்கைகள் முடிந்து பூட்டபட்ட பின்னரே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கடையில் இருந்த வாகன ஸ்ரிக்கர்கள், டிஜிற்றல் இயந்திர சாதனங்கள் மற்றும் கணனிகள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன் கடை கட்டடமும் முற்றாக சிதைவடைந்துள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்