வவுனியா பிதேச செயலகமும் பிரதேச கலை இலக்கிய பேரவையும் இணைந்தும் நடத்தும் கலை இலக்கிய பெருவிழா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று(07.04) செவ்வாய்க்கிழமை நடைபெற்று வருகின்றது.
காலை, மாலை என இரு அமர்வுகளாக இடம்பெறும் இந் நிகழ்வில் நாட்டிய நடனம், கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், கோலாட்டம், பிரதேச கலாசார நிகழ்வுகள் என பல வகையான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இன் நிகழ்வில் பிதேச கலைஞர்கள், பிரதே செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.