திருச்சியில் இலங்கை அகதிப் பெண் திடீர் மாயம்..!

655

Missingதிருச்சி கே.கே.நகரில் இலங்கை பெண் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக திருச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள ஐய்யப்ப நகர் பெரியார்தெருவை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி தேன் மலர்.

இவர்கள் இலங்கை அகதிகள் ஆவர். இவர்களுக்கு தனுசியா (19) என்ற மகள் உள்ளார். தனுசியா 9–ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு அங்குள்ள ஒரு கடைக்கு தனுசியா வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த 10–ந் திகதி தனுசியா கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனாலும் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதுகுறித்து தாய் தேன் மலர் கே.கே.நகர் பொலிசில் புகார் செய்தார். தனுசியா கடத்தப்பட்டாரா? அல்லது மாயமாக வேறு காரணம் உள்ளதா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.