வவுனியாவில் வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கிகள் இணைந்து “எமது பாரம்பரியத்தை பாதுகாப்போம் சிக்கனம் பேணுவோம்” எனும் தொனிப்பொருளில் நடாத்திய புத்தாண்டு தின விளையாட்டுப் போட்டி நேற்று (25.04) வைரவபுளியங்குளம் ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இன் நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா கலந்து சிறப்பித்தார். மற்றும் கிராம சேவகர்கள், அரச ஊழியர்கள் உட்பட பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.







