வவுனியா விவசாயக் கல்லூரியில் தொடர்ச்சியாக நிலவி வரும் விரிவுரையாளர் பற்றாக்குறையை நீக்குமாறு கோரி மாணவர்கள் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
வடமாகாண சபை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனை சந்தித்து குறித்த மகஜரை இன்று சனிக்கிழமை கையளித்துள்ளனர்.
20 விரிவுரையாளர்கள் காணப்பட வேண்டிய விவசாயக் கல்லூரியில் 4 விரிவுரையாளர்கள் மாத்திரமே காணப்படுவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.





