யுத்­தத்தின் போது இறந்த உறவுகளை நினைவு கூரலாம் : பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்!!

707

police-spokesman

வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டில் எந்த பகு­தி­யிலும் தமி­ழர்கள் யுத்­தத்தின் போது இறந்த தமது உற­வு­களை நினைவு கூரலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. அது அவர்­க­ளது உரிமை என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

எனினும் பயங்­க­ர­வா­தி­க­ளாக அறி­யப்­பட்ட தமி­ழீழ விடு­தலைப் புலி­களை நினைவு கூர்தல், அது தொடர்பில் பொது­வான நிகழ்­வு­களை நடத்­துதல் உள்­ளிட்ட நடவ்­டிக்­கைகள் தடைசெய்யப்பட்டவை அவற்றை முன்­னெ­டுக்க முடி­யாது. என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்­த­தா­வது..

இறந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்­து­வ­தென்­பது மனி­தா­பி­மான செயல். அத்­துடன் அது உற­வு­களின் உரி­மையாகும். அப்­படி இருக்­கையில் வடக்கில் தமி­ழர்கள் தமது உற­வு­களை நினைவு கூரும் போது அதற்கு யாரும் தடை விதிக்க முடி­யாது. நாமும் தடை விதிக்­க­வில்லை. வடக்கு மட்டுமன்றி நாட்டில் எந்த பிர­தே­சத்­திலும் இறந்த ஒரு­வ­ருக்­காக உற­வி­னர்கள் அஞ்­சலி செலுத்தலாம்.

இந் நிலையில் இலங்­கையில் தடை செய்­யப்­பட்ட அமைப்பு என்ற ரீதியில் விடு­தலைப் புலி­களை நினைவு கூர்வதே சட்ட விரோ­த­மா­னது என்ற ரீதியில் நாம் தடை செய்­துள்ளோம். விடு­தலைப் புலிகள் சட்ட விரோத பயங்­க­ர­வாத அமைப்பு என்ற ரீதியில் அவர்­களை நினைவு கூர்­வதும் தவறாகும். அதன்­ப­டியே புலிகள் அமைப்பை நினைவு கூரும் வித­மாக பொது இடங்­களில் கூட்டங்களை நடத்­து­வது, சுடர் ஏற்­று­வது உள்­ளிட்ட விட­யங்­களை நிக்ழ்­வு­களை நாம் தடை செய்கிறோம். அவ்­வா­றான நடவடிக்­கை­களில் ஈடு­ப­டு­வோரை நாம் கைதுச் செய்வோம்.

அண்­மையில் வட­மா­காண சபை உறுப்­பினர் சிவ­ஜி­லிங்கம் புலி­களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றுவ­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­தது. இந் நிலையில் முல்லை தீவு உதவி பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோ­ச­னைக்கு அமைய பொலிஸார் அங்குச் சென்ற அவ­ரிடம் விளக்கம் கோரிய போது, அவர் யுத்­ததில் உயி­ரி­ழந்த தனது உற­வினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதாக  குறிப்பிட்டுள்ளார். அது அவரது உரிமை. அவரது உறவுகளுக்கு அவரால் அஞ்சலி செலுத்த முடியும். அதில் எவ்வித தவறும் இல்லை. என்றார்.