ஒரே நாயுடன் போதைப்பொருளை கண்டுபிடித்து கலக்கும் நபர்..!

551

Dogஜேர்மனியில் நாயுடன் இணைந்து போதை மருந்து செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை கண்டுபிடித்து வருகின்றார் ரெய்னர் ரூதர் (Reiner Reuther).

ரெனிர் ரூதர் (Reiner Reuther) மற்றும் அவரது நாய் தோர் (Thor) ஆகிய இருவரும் இணைந்து பெற்றோர்களை மறந்து போதை மருந்து பழக்கங்களுக்கு அடிமையாவதில் இருந்து குழந்தைகளை தடுக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

25 ஆண்டுகளாக ஹோட்டல் உரிமையாளராக இருந்த இவர் விலங்குகளுடன் பணியாற்ற விரும்பி அமெரிக்க பொலிஸ் அகாடமியில் நாய் கையாளுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.

அங்கு பயிற்சியை முடித்துவிட்டு ஜேர்மன் வந்த இவர் குழந்தைகள் போதை காப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.



மேலும் அவரது பணியில் சந்தித்த அனுபவங்கள் குறித்து கூறுகையில், நான் பல்வேறான அனுபவங்களை இந்த பணியில் சந்தித்துள்ளேன்.

அவற்றில் ஒரு அனுபவமாக தனது மகள் போதையில் ஈடுபடுவதாக சந்தேகித்த பெற்றோர்கள் இவர்கள் மூலமாக வீட்டில் சோதனை செய்ததில் கழிவுகளை பயன்படுத்தும் இடத்தில் கோகைன் போதை பொருளை மறைத்து வைத்து பயன்படுத்துவைதை கண்டுபிடித்துள்ளனர்.

மற்றுமொரு அனுபவமாக பெற்றோரே தன்னுடைய மகன் தனது இளமைப் பருவத்தை புறக்கணித்து விட்டு தவறான வழியில் செல்கிறான் என்று பொலிசில் புகார் கொடுத்துள்ளனர் என்றும் தனது அனுபவங்களை கூறியுள்ளார்.

மேலும், தனியார் நாய் கையாளர்கள் இந்த மாதிரியான செயல்களில் பொறுப்புடன் ஈடுபடுவதில்லை. ஆனாலும், தனது சேவைகளை திறம்பட செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெற்றோர்கள் அனைவரும் மனநல ஆலோசனை பெறுவது என்பது முக்கியமாகும். நான் இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் பெற்றோர்களுக்கு உதவி செய்ய விரும்புகின்றேன்.

ஆனால் அவர்கள் தங்கள் குழுந்தைகள் குறித்த விடயங்களை தெரிவிப்பது இந்த பிரச்சனைக்கு உதவியாக இருக்கும்.

மேலும், போதை பிரச்சனையானது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பரவலாக பேசப்படுகின்ற விடயம் என்றும் ஆனால் ஜேர்மனியில் இதனை ஒரு மறைமுக பிரச்சனையாக கையாளுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் ஒரு தேடலுக்கு 95 யூரோ பணம் வாங்குகின்றார். மேலும் இந்த பணி குறித்து கூறுகையில், தனியாக வேலை பார்க்கும் நாங்கள் எங்களது தொழிலை மேலும் வளரச் செய்ய விரும்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.