சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குச் செல்வதற்கு உதவிய குற்றசச்சாட்டின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவனல்லை, நீர்கொழும்பு மற்றும் நகுலுகமுவ பிரதேசங்களில் வசித்து வருபவங்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 30 லட்சம் ரூபா பெறுமதியான காசோலை மூன்று, கடவுச் சீட்டு மற்றும் உபகரணங்கள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் கடந்த 5ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு 60 பேரை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.