சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது!!

354

colombo_airport-4

சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் தொழில் புரியும் நோக்கில் நாட்டில் இருந்து செல்ல முயற்சித்த 29 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி முகவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாக்களை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது சட்டவிரோதமானது.

கடந்த சில தினங்களில் மாத்திரம் இவ்வாறு சட்டவிரோதமாக செல்ல முயற்சித்த சுமார் 100 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.