சட்டமா அதிபர் திணைக்களத்தின் வவுனியாவிற்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (11.06.2015) காலை சுபவேளையில் ஜனாதிபதி சட்டத்தரணியும் சட்டமா அதிபருமான யுவன் விஜயதிலக்க அவர்களின் அழைப்பின்பேரில் நீதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாஸ ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமயத்தலைவர்கள் வவுனியா நீதிமன்ற நீதிபதிகள் சட்டத்தரணிகள், உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப்பிரிவினர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-வவுனியா நெற் செய்திகளுக்காக பாஸ்கரன் கதீசன்-






