ரயிலில் மோதி திருமணமாகாத காதல் ஜோடி பரிதாபமாக பலி!!

508

Train

மூடி வைக்கப்பட்டிருந்த ரயில் கடவையை துவிச்சக்கர வண்டி மூலம் கடக்க முயன்ற ஜோடியொன்று ரயிலில் மோதி பலியாகியுள்ளது.

சிலாபம் – கொழும்பு வீதியின் மெரவல ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளாத 60 வயது காமினி ஜான்ஸ் மற்றும் 56 வயது அலாவுதீன் ஆகியோர் பல காலம் குடும்ப வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜோடி கசிப்பு கொள்வனவு செய்து மீண்டும் வீடு திரும்பியபோது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.