முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
துணுக்காய் பிரதேச செயலாளர் திரு.சி.குணபாலன் தலைமையில் நடைபெறவுள்ள இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக ஈழத்துக் கவிஞர் செல்லத்துரை சுதர்சன்(சிரேஸ்ட விரிவுரையாளர், தமிழ்த்துறை – பேராதனைப் பல்கலைக்கழகம்) அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக திரு இ.பிரதாபன் (பிரதேச செயலாளர் -புதுக்குடியிருப்பு), அடங்காப்பற்றான் அருணா செல்லத்துரை, ஈழத்துக் கவிஞர் முல்லை முஸ்ரிபா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வுகள்
மங்கள விளக்கேற்றல்
தமிழ்மொழி வாழ்த்து
வரவேற்பு நடனம் (மு/கற்சிலைமடு அ.த.பா மாணவர்கள்)
வரவேற்புரை – செல்வன் வ.ஆதவன் (மாணவன் யாழ்/பல்கலை, முத்தமிழ் மன்ற உப தலைவர்)
தலைமையுரை – கவிஞர் சி.குணபாலன் (பிரதேச செயலர், துணுக்காய்)
வாழ்த்துரை – பண்டிதர் பிரதீபன் (புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்)
பிரதம விருந்தினர் உரை
சிறப்பு விருந்தினர் உரை
மூத்த படைப்பாளிகள் கௌரவிப்பு
தனி நடனம்
நூல் வெளியீட்டுரை – நாகேந்திரராசா (அதிபர் கற்சிலைமடு அ.த.பா, முத்தமிழ் மன்ற போசகர்)
நூல் வெளியீடு
நூல் ஆய்வுரை – திரு எஸ்.எஸ் பீதாம்பரம் (தமிழ்ப்பாட உதவிக்கல்விப்பணிப்பாளர், முல்லைக்கல்வி வலையம்)
*சிறப்புரை – அடங்காப்பற்றான் அருணா செல்லத்துரை
ஏற்புரை – வே.முல்லைத்தீபன்