வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டிகள் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் இன்று (09.07.2015) காலை 9.30 மணியளவில் ஆரம்பமானது.
இன்றைய நிகழ்வின் தலைவராக திரு.இ.இரவீந்திரன் (செயலாளர் – கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இஞைர் விவகார அமைச்சு – வடமாகாணம்) மற்றும் பிரதம விருந்தினராக கௌரவ கந்தையா சிவஞானம் (பேரவைத்தலைவர்- வடமாகாண சபை)
சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண கல்விப் பணிப்பாளர், வடமாகாண வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வடமாகாண பாடசாலைகளின் அதிபர்கள், தேசிய கல்வியக் கல்லூரி பிடாதிபதி, விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மாகாணமட்ட ஏழாம் கட்டத்தின் அர மரதனில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கப்பட்டன.
09,10,11,12,13 ஆகிய திகதிகளில் ஐந்து பிரிவுகளாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் நடை பெறவுள்ளது.
இப் போட்டியில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகள் கலந்து கொள்கின்றன.
விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களும் உற்சாகத்துடன் போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-பிராந்திய செய்தியாளர்-






