வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டிகளின் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.
மூன்றாம் நாளான இன்று (11.07.2015) காலை 9.00 மணியளவில் போட்டிகள் ஆரம்பமானது.
இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இலங்கை மெய்வன்மை சங்கத்தின் தலைவர் சுகத் திலகரட்ன கலந்துகொண்டார்.
அவர் இங்கு உரையாற்றுகையில் ‘வடமாகாண விளையாட்டுப் போட்டிகள் தேசிய போட்டிகளுக்கு நிகராக காணப்படுகின்றது என்று தெரிவித்த அவர், வடமாகாண மாணவர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கவுள்ளதாகவும், மாணவர்களுக்கு மட்டுமல்லாது நடுவர்களுக்குமான பயிற்சிகளை அதிகரிக்கவுள்ளதாகவும் வாக்குறுதியளித்தார்.
இங்கு விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதுவரையில் வெற்றிபெற்ற வவுனியா மண்ணின் வீரர்கள் விபரங்கள் வருமாறு..
01.19வயதுப் பிரிவில் 800M ஓட்டப்போட்டியில் ம.ஜெயமதி -1ம் இடம் (புதுக்குளம் மகா வித்தியாலயம்)
02.17வயதுப் பிரிவில் 400M ஓட்டப்போட்டியில் ம.கபிலவன் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) -2ம் இடம்
03. 21 வயதுப் பிரிவில் தட்டெறிதல் போட்டியில் P.டினேசன் (புதுக்குளம் மகா வித்தியாலயம்) 2ம் இடத்தையும் அதே பாடசாலையைச் சேர்ந்த சிந்துஜன் 3ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
04. 21வயதுப் பிரிவு முப்பாய்ச்சல் போட்டியில் அ.மகிலன் (புதுக்குளம் மகா வித்தியாலயம்) 3ம் இடம்
05. 19 வயதுப் பிரிவில் 400M தடைதாண்டல் போட்டியில் P.தர்சிகா (வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி) 2ம் இடம்
06. 21வயதுப் பிரிவில் 200M ஓட்டப் போட்டியில் P.ஜெயந்தன் (புதுக்குளம் மகா வித்தியாலயம்) 3ம் இடம்
07. 15வயதுப் பிரிவில் 200M ஓட்டப்போட்டியில் சரகன் (வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்) 2ம் இடம்
இப் போட்டிகள் 09,10,11,12,13 ஆகிய திகதிகளில் ஆகிய ஐந்து பிரிவுகளாக வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் நடை பெறுகின்றது.
இதில் வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்ட பாடசாலைகள் கலந்து கொள்கின்றன.
விசேட தேவைக்குட்பட்ட மாணவர்களும் உற்சாகத்துடன் கலந்து கொண்டதுடன் அவர்களுக்கான சான்றிதல்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-பிராந்திய செய்தியாளர்-