வவுனியா அரசர்பதி ஸ்ரீகண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விழா நேற்று(13.07.2015) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முன்னூறு வருடங்களுக்கு முன்னதாக மூதாதையர்களால் கட்டமைத்த இவ்வாலாயம் நூறு வருடங்களுக்கு மேலாக தெய்வத்திரு வேலாயுதர் அரசர் மகன் தெய்வத்திரு அரசர் வேலுப்பிள்ளை ஆகியோரால் பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து பராமரித்து வந்த இக் கோவில் மகன் அரசன் வேலுப்பிள்ளை குணரத்தினம், மகள் குணரத்தினம் வைஷ்ணவி ஆகியோரால் புதிதாக வடிவமைத்து நிர்மானிக்கப்பட்டு 11.04.2013 வியாழக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நிகழ்த்தி பொற்கோயிலாக அடியார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இவ் வருட பொங்கல் விழாவில் தமிழருவி த.சிவகுமாரின் தமைமையில் சிறப்புப் பட்டிமன்றம், கலை நிகழ்வுகள், இலங்கையின் முன்னனி இசைக்குழுவினர் மற்றும் தென்னிந்திய சுப்பர் சிங்கர் குழுவினரும் இணைந்து வழங்கிய இன்னிசை இரவு மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
-பிராந்திய செய்தியாளர்-