வவுனியா மகாறம்பைக்குளம் வீட்டுத்திட்டம் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
வவுனியா மகாறம்பைக்குளம்- கருப்பனிச்சங்குளம் பகுதியிலுள்ள குளம் ஒன்றிக்கு அருகில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று (18.07.2015) பிரதேசவாசிகளால் இனம்காணப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் A.தம்பிராசா என்ற 69 வயது முதியவராவார். இவரது உருக்குலைந்த சடலத்திற்கு அருகில் நஞ்சு மருந்துப் போத்தல் ஒன்றும் காணப்பட்டது.
இவர் ஒரு மாதத்திற்கு முன்னர் இவ்விடத்திற்கு வந்து நஞ்சருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதேசவாசிகள் உடனடியாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.