வன்னி தேர்தல் மாவட்டத்தில் தபால்மூலம் வாக்களிக்க 6967 பேர் தகுதி!!

583

Election

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்கவென 6967 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 2654 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2670 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1643 பேரும் தபால் மூலம் வாக்களிக்கும் தகைமை பெற்றுள்ளனர்.

மூன்று மாவட்டத்துக்குமான வாக்குச் சீட்டுகள் கடந்த 22 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்துக்கு எடுத்துவரப்பட்டு 23 ஆம் திகதி முல்லைத்தீவுக்கும் மன்னாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.