வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரணர் குழுவும் இணைந்து சமாதான தினத்தையொட்டி நடாத்திய இரத்ததான முகாம் நேற்று முன்தினம் (20.09.2015) காலை 9.00 மணிமுதல் 12.30 மணிவரை வவுனியா விபுலாநந்தா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் முகாமில் சாரணர்களுடன் பொது மக்களும் உயிர் காக்கும் தானத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டதுடன், வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரணர் குழுவும் இணைந்து நடாத்தும் 10 ஆவது இரத்ததான முகாம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் தொடராக 6 மாத காலப்பகுதிக்கு ஒருதடவை இவ் முகாமை வவுனியாவில் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இளைஞர்கள் தங்களின் கிராமங்களில் இவ்வாறான நிகழ்வை ஒழுங்கு செய்து மகத்தான சமூக பணியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் செயலாளரும், உதவி மாவட்ட ஆணையாளருமான திரு சு.காண்டீபன் கேட்டுக்கொண்டார்.






