செயற்கை முறை கருவுறல் மூலம் 800 ஆவது குழந்தை பிரசவிப்பு!!

748

baby_19இலங்­கையின் முன்­னணி மற்றும் JCIA சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற வைத்­தி­ய­சா­லை­யான லங்கா ஹொஸ்­பிட்டல்ஸ், தனது மற்­று­மொரு சாத­னையை நிலை­நாட்­டி­யுள்­ளது. கருக்­கட்டல் நிலையம் அறி­முகம் செய்­யப்­பட்­டது முதல் செயற்கை முறை கரு­வுறல் மூலம் 800 ஆவது குழந்தையை அண்­மையில் வெற்­றி­க­ர­மாக பிர­ச­வித்­தி­ருந்­தது.

மிகச்­சி­றந்த முறையில் சுகா­தாரப்பரா­ம­ரிப்பு சேவை­களை வழங்கும் வைத்­தி­ய­சா­லை­யான லங்கா ஹொஸ்­பிட்­டல்ஸின் புரட்­சி­க­ர­மான கருக்­கட்டல் நிலை­யத்தின் மூல­மாக செயற்கை முறை கரு­வுறல் துறையில் பல நிய­மங்கள் பதிக்­கப்­பட்­டுள்­ளன.

அதி­ந­வீன சாதனங்­களை உள்­ள­டக்­கிய IVF நிலையம் வரு­டத்தின் 365 நாட்­களும் திறந்­தி­ருப்­ப­துடன் பெண்களின் இயற்­கை­யான மாத­விடாய் சுழற்­சியில் மாற்­றங்கள் ஏற்­படா வண்ணம் IVF தொழி­நுட்­பத்தைக் கொண்டு சிகிச்­சை­க­ளுக்கு உட்­ப­டுத்த முடி­கின்­றமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. இதனால் செயற்கை முறை கரு­வுறல் செயன்­முறை மூலம் வெற்­றி­க­ர­மான கரு­வுறல் இடம்­பெ­று­வது உறுதி செய்­யப்­ப­டு­கி­றது.

இலங்­கையின் முன்னணி மருத்­துவ மற்றும் நவீன தொழில்­நுட்ப வச­திகள் படைத்த லங்கா வைத்­தி­ய­சாலை தற்­போது தன் நவீன கரு­வி­களைப் பயன்­ப­டுத்தி IVF தொழில்­நுட்­பத்தின் மூலம் 5 நாட்­க­ளுக்குள் முளை கருக்கள் ஆய்­வு­கூட சூழலில் பேணப்­பட்டு, மேலும் தயார்­ப­டுத்­தப்­பட தேவையான மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளையும் இனிவரும் காலங்களில் தம்வசமாக்கிக்கொள்ளும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.



இந்த முக்­கி­யத்­துவம் வாய்ந்த இலக்கு எய்­தப்­பட்­டமை தொடர்பில் பெண் நோயியல் நிபு­ணரும் குழந்­தைப்­பேறு மருத்­து­வ­ரு­மான வைத்­தியர். நிஷேந்­திர கரு­ணா­ரட்ன கருத்து தெரி­விக்­கையில், எமது கருக் ­கட்டல் நிலை­யத்­திற்கு விஜ யம் செய்யும் ஜோடி­க­ளுக்கு தொடர்ச்­சி­யான முன் பரி­சோ­த­னைகள் முன்­னெ­டுக்­கப்­படும். எமது உயர்ந்த ஆளுமை படைத்த விசேட செயலணியினர் இரு தரப்பினரையும் சோதனை க்குட்படுத்துவார்கள். முதற்கட்டமாக ஆணின் விந்தணு அளவு கருத்தில் கொள்ளப்படும். பெண்களை பொருத்த மட்டில், Trans Vaginal Scan அல்லது 3D Scan ஒன்றை மேற்கொண்டு கருக்கட்டா மைக்கான காரணம் கவனிக்கப்படுகிறது.