தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுடறுத்தி, தழிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
இதன்படி யாழ் மாவட்டத்தில் இன்று காலை 09.00 மணியளவில் இருந்து இரவு 09.00 வரை அனைத்து சந்தைக் கடைத்தொகுதிகள், வியாபார தளங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.
யாழ் மாவட்ட பேருந்துகளின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன்காரணமாக யாழ் மாவட்டத்தில் அனைத்து இடங்களும் வெறிச்சோடி கிடக்கின்றன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனால் வாத்தக நிலையங்கள், பொதுச்சந்தைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களும் மூடப்படடிருந்தன.
நீண்ட தூர மற்றும் குறுய தூர போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை. ஹர்த்தால் காரணமாக நகரங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன.
பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளது.