தன்னிச்சையாக வாகனங்களை தரிப்பதற்கு கொழும்பு நகரில் புதியமுறை அமுலாகிறது!!

442

image-138

கொழும்பு பிர­தே­சத்தில் வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இடங்­களில் நவீன முறையில் அட்டை முறைமையினை பயன்படுத்தி வாக­னங்­களை தரித்தல் அதற்­கான கட்டணங்களை செலுத்தும் நடைமுறையினை கொழும்பு மாந­கர சபை­ அமுல்படுத்தியுள்ளது.

வெளி­நா­டு­களில் உள்­ளதைப் போன்று குறித்த வாகனத் தரிப்­பி­டங்­களில் வாகன உரி­மை­யா­ளர்கள் தன்­னிச்­சை­யா­கவே இந்த அட்­டை­களை பயன்­ப­டுத்தி வாக­னங்­களை தரித்துக் கொள்ள முடியும். அதன்பின் குறித்த அட்­டை­களை காண்­பித்து தன்­னிச்­சை­யா­கவே வெளி­யேறக் கூடியதாக இருக்கும்.

கொழும்பு மேயர் ஏ.ேஜ.எம். முஸம்மில் நேற்று நடத்திய ஊடக மாநா­டொன்றில் இத்திட்டம் சம்­பந்­த­மாக விளக்கிக் கூறினார். முதற்­கட்­ட­மாக கலதாரி ஹோட்­டலில் இருந்து வெள்­ள­வத்தை வரை­யி­லான பாதைகள், மற்றும் டுப்­ளிக்­கேஷன் வீதிவரை இத்­திட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது.

இதற்­காக சுவிட்ஸர்லாந்து ­நாட்டில் இருந்து 1.5 மில்­லியன் யூரோ நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இதற்­காக ரீங்கா கார் பார்க் தனியார் நிறு­வ­னமும் கொழும்பு மாந­கர சபையும் எதிர்வரும் 8 வரு­டத்­திற்­காக ஒப்­பந்­த­மொன்றை கைச்­சாத்­திட்­டன. 850 கார் தரிப்­பி­டங்களில் சுமார் 5000 கார்கள் தரிக்கும் இடங்கள் இந்தக் கம்­ப­னிக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. இக்கம்­ப­னியின் வரு­மா­னத்தில் ஒரு மாதத்­திற்கு 3.4 மில்­லியன் ரூபாவை மாந­கர சபைக்குச் செலுத்தல் வேண்டும். அத்­துடன் விளம்­பரம் மற்றும் இதர இலா­பத்­திலும் 40 வீதத்தை மாநகர சபைக்கு செலுத்தல் வேண்டும். இதற்காக 140 இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து இக்கம்பனியினால் தருவிக்கப்பட்டுள்ளன.