இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
இன்று 19.11.2015ஆம் திகதி திருமலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அருணகிரி வீதி, பூம்புகார், லொயிட்ஸ் அவன்யூ, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்னஊறணி, பெரிய ஊறணி, இருதயபுரம், கொக்குவில், ஞானசூரியம் சதுக்கம், சவுக்கடி, தளவாய், புண்ணைகுடா ஆகிய இடங்களிலும் நாளை 20.11.2015ஆம் திகதி மண்டூர், கணேசபுரம், சங்கர்புரம், தம்பளவத்தை, ராணமடு ஆகிய இடங்களிலும் 21.11.2015ஆம் திகதி பிரதான வீதி, காந்தி வீதி, மத்திய வீதி, புனித அந்தோனியார் வீதி, நீதிமன்ற வளாகம், மாநகர சபை வளாகம், பிரதேச செயலக வளாகம், ஆஸ்பத்திரி வீதி மற்றும் வாழைச்சேனை பொலிஸ் பகுதி, கருவாக்கேணி, கிண்ணையடி, கிரான், கோரகல்லிமடு, சந்திவெளி பாலயடிதோனை, பறங்கியாமடு, முறக்கொட்டாஞ்சேனை, சித்தாண்டி, மற்றும் புலிபாய்ந்தகல் பகுதி முழுவதும் ஆகிய இடங்களிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.




